தோட்டம் போடுவோம்
உயிர் மூச்சு
வாருங்கள், தோட்டம் போடுவோம்
Updated: December 26, 2015 15:28 IST
மாடித் தோட்டம் போட்டு அசத்திய பிறகு, குடியரசுத் தலைவரை ஜோதிகா சந்திக்கும் காட்சிகளை ‘36 வயதினிலேயே’ திரைப்படத்தில் நம்மில் பலரும் பார்த்திருப்போம். அதைப் பார்த்ததுடன் திருப்தி அடைந்துவிடாமல், ‘நாமும் மாடித் தோட்டம் போடலாமே’ என்ற யோசனை மனதுக்குள் எட்டி பார்த்திருக்கும். வீட்டில் இருக்கும் இடத்தைப் பற்றிய கவலையை ஒதுக்கி வைத்துவிட்டாலும், ‘எப்படித் தோட்டத்தை அமைப்பது?’ என்ற கேள்வி சற்றே மலைப்பை ஏற்படுத்தலாம்.
ஆனால், நேரடியாகக் களத்தில் இறங்கிவிட வேண்டியதுதான். அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, நகர்ப்புறத் தோட்டக் கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ‘நீங்களே செய்து பாருங்கள்’ என்ற செயல்முறை விளக்கக் கையேடு விளக்குகிறது. வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கு அது தரும் எளிய யோசனைகள்:
முதல் கட்டம்
மாடியில் காய்கறிகளைப் பயிரிடுவதற்கான வழிமுறைகள்:
வீட்டுக் காய்கறித் தோட்டத்தை உருவாக்குவதில் பல் வேறு படிநிலைகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:
இடம் தேர்வு செய்தல்:
மாடிப் பகுதியில் அதிகச் சூரியஒளி கிடைக்கும் இடங்கள் மற்றும் அதிகப்படி நீர் எளிதாக வெளியேறுவதற்கான வடிகால் வசதி உள்ள இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
நீர்க்கசிவைத் தடுத்தல்:
தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நீர்க்கசிவைத் தடுப்பதற்கு 4 X 4 சதுர மீட்டரில் பிளாஸ்டிக் விரிப்புகளை விரிக்கவும்.
செடி வளர்ப்புப் பைகள்
இதன் பிறகு செடிகளை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கலாம். செடிகள் வளர்ப்பதற்கான பிளாஸ்டிக் பைகளைத் தயார் செய்வது எப்படி:
- தென்னைநார்க் கழிவு கட்டியுடன் கூடிய பிளாஸ்டிக் பைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- கத்தரிக்கோல் கொண்டு சீலிடப்பட்ட பகுதியைக் கத்தரித்துப் பிரிக்க வேண்டும்.
- தென்னைநார்க் கழிவுக் கட்டிகளுடன் தேவையான அளவு தண்ணீரைச் சேர்க்க வேண்டும்.
- ஐந்து முதல் பத்து நிமிடங் களுக்குக் காத்திருக்க வேண்டும்.
- தற்போது தென்னைநார்க் கழிவு நான்கு முதல் ஐந்து மடங்காக உப்பி அதிகரிக்கும்.
- அதிகப்படியான நீர் வெளியேறிச் செடிகள் அழுகாமல் இருக்கப் பையின் பக்கவாட்டில் நான்கு துளைகளை இடவேண்டும்.
- நுண்ணுயிர் உரங்களை (அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா) மற்றும் நுண்ணுயிர் பூஞ்சானக் கொல்லிகளை (சூடோமோனாஸ் மற்றும் டிரைகோடெர்மா விரிடி) ஒரு கிலோ தொழு உரத்துடன் கலந்து, அதைப் பின்னர் தென்னைநார்க் கழிவுடன் நன்கு கலக்க வேண்டும். அரசு தோட்டக் கலை பண்ணை மற்றும் தனியார் நாற்றங்கால்களில் தொழு உரம் கிடைக்கும்.
- நுண்ணுயிர் உரங்களை (அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா) மற்றும் நுண்ணுயிர் பூஞ்சானக் கொல்லிகளை (சூடோமோனாஸ் மற்றும் டிரைகோடெர்மா விரிடி) ஒரு கிலோ தொழு உரத்துடன் கலந்து, அதைப் பின்னர் தென்னைநார்க் கழிவுடன் நன்கு கலக்க வேண்டும். அரசு தோட்டக் கலை பண்ணை மற்றும் தனியார் நாற்றங்கால்களில் தொழு உரம் கிடைக்கும்.
காத்திருப்பு
செடிகள் வளர்ப்பதற்கான பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.
தென்னைநார்க் கழிவுகள் நன்கு மக்குவதற்காக, பைகளை ஏழு முதல் எட்டு நாட்களுக்கு அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு தென்னைநார்க் கழிவு கருப்பு நிறமாக மாறிவிடும். அப்போதுதான் பைகள், விதைப்பதற்கு ஏற்றதாக மாறும்.
செடிகளை வளர்க்கும் காலம்:
காய்கறிச் செடிகளை எல்லாக் காலங்களிலும் பயிர் செய்யலாம். ஆனால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இந்த இரண்டு மாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
விதைப்பு முறை
நேரடி விதைப்புமுறை: வெண்டை, கொத்தவரை, செடி அவரை மற்றும் முள்ளங்கி விதைகளை நேரடியாக விதைக்க வேண்டும். விதையின் அளவைவிட இரண்டரை மடங்கு அதிக ஆழத்தில் விதைத்த பிறகு, மண்ணால் மூடிவிடவேண்டும்.
நேரடி விதைப்புமுறை: வெண்டை, கொத்தவரை, செடி அவரை மற்றும் முள்ளங்கி விதைகளை நேரடியாக விதைக்க வேண்டும். விதையின் அளவைவிட இரண்டரை மடங்கு அதிக ஆழத்தில் விதைத்த பிறகு, மண்ணால் மூடிவிடவேண்டும்.
கீரை வகைகளின் விதைகள் அளவில் மிகச் சிறியதாக இருப்பதால், ஒரு தேக்கரண்டி விதையுடன் இரண்டு பங்கு மணல் அல்லது நுண்ணுயிர் உரத்தைக் கலந்து தெளிக்க வேண்டும். பிறகு அதைச் செய்தித்தாளால் மூடிவிட வேண்டும். அதன் மேல் பூவாளியைக் கொண்டு நீர் ஊற்ற வேண்டும். விதைகள் நன்கு முளைத்த பிறகு தாளை எடுத்துவிட வேண்டும்.
நாற்றுவிட்டு நடவு செய்யும் முறை: நாற்றுவிட்டு நடவு செய்து பயிரிடும் காய்கறிகளான தக்காளி, கத்தரி, மிளகாய் ஆகியவற்றைக் குழித்தட்டில் ஒரு குழிக்கு ஒரு விதை வீதம் விதைக்க வேண்டும்
உயிர் மூச்சு
வாருங்கள், தோட்டம் போடுவோம்
Updated: December 26, 2015 15:28 IST
மாடித் தோட்டம் போட்டு அசத்திய பிறகு, குடியரசுத் தலைவரை ஜோதிகா சந்திக்கும் காட்சிகளை ‘36 வயதினிலேயே’ திரைப்படத்தில் நம்மில் பலரும் பார்த்திருப்போம். அதைப் பார்த்ததுடன் திருப்தி அடைந்துவிடாமல், ‘நாமும் மாடித் தோட்டம் போடலாமே’ என்ற யோசனை மனதுக்குள் எட்டி பார்த்திருக்கும். வீட்டில் இருக்கும் இடத்தைப் பற்றிய கவலையை ஒதுக்கி வைத்துவிட்டாலும், ‘எப்படித் தோட்டத்தை அமைப்பது?’ என்ற கேள்வி சற்றே மலைப்பை ஏற்படுத்தலாம்.
ஆனால், நேரடியாகக் களத்தில் இறங்கிவிட வேண்டியதுதான். அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, நகர்ப்புறத் தோட்டக் கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ‘நீங்களே செய்து பாருங்கள்’ என்ற செயல்முறை விளக்கக் கையேடு விளக்குகிறது. வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கு அது தரும் எளிய யோசனைகள்:
முதல் கட்டம்
மாடியில் காய்கறிகளைப் பயிரிடுவதற்கான வழிமுறைகள்:
வீட்டுக் காய்கறித் தோட்டத்தை உருவாக்குவதில் பல் வேறு படிநிலைகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:
இடம் தேர்வு செய்தல்:
மாடிப் பகுதியில் அதிகச் சூரியஒளி கிடைக்கும் இடங்கள் மற்றும் அதிகப்படி நீர் எளிதாக வெளியேறுவதற்கான வடிகால் வசதி உள்ள இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
நீர்க்கசிவைத் தடுத்தல்:
தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நீர்க்கசிவைத் தடுப்பதற்கு 4 X 4 சதுர மீட்டரில் பிளாஸ்டிக் விரிப்புகளை விரிக்கவும்.
செடி வளர்ப்புப் பைகள்
இதன் பிறகு செடிகளை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கலாம். செடிகள் வளர்ப்பதற்கான பிளாஸ்டிக் பைகளைத் தயார் செய்வது எப்படி:
- தென்னைநார்க் கழிவு கட்டியுடன் கூடிய பிளாஸ்டிக் பைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- கத்தரிக்கோல் கொண்டு சீலிடப்பட்ட பகுதியைக் கத்தரித்துப் பிரிக்க வேண்டும்.
- தென்னைநார்க் கழிவுக் கட்டிகளுடன் தேவையான அளவு தண்ணீரைச் சேர்க்க வேண்டும்.
- ஐந்து முதல் பத்து நிமிடங் களுக்குக் காத்திருக்க வேண்டும்.
- தற்போது தென்னைநார்க் கழிவு நான்கு முதல் ஐந்து மடங்காக உப்பி அதிகரிக்கும்.
- அதிகப்படியான நீர் வெளியேறிச் செடிகள் அழுகாமல் இருக்கப் பையின் பக்கவாட்டில் நான்கு துளைகளை இடவேண்டும்.
- நுண்ணுயிர் உரங்களை (அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா) மற்றும் நுண்ணுயிர் பூஞ்சானக் கொல்லிகளை (சூடோமோனாஸ் மற்றும் டிரைகோடெர்மா விரிடி) ஒரு கிலோ தொழு உரத்துடன் கலந்து, அதைப் பின்னர் தென்னைநார்க் கழிவுடன் நன்கு கலக்க வேண்டும். அரசு தோட்டக் கலை பண்ணை மற்றும் தனியார் நாற்றங்கால்களில் தொழு உரம் கிடைக்கும்.
- நுண்ணுயிர் உரங்களை (அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா) மற்றும் நுண்ணுயிர் பூஞ்சானக் கொல்லிகளை (சூடோமோனாஸ் மற்றும் டிரைகோடெர்மா விரிடி) ஒரு கிலோ தொழு உரத்துடன் கலந்து, அதைப் பின்னர் தென்னைநார்க் கழிவுடன் நன்கு கலக்க வேண்டும். அரசு தோட்டக் கலை பண்ணை மற்றும் தனியார் நாற்றங்கால்களில் தொழு உரம் கிடைக்கும்.
காத்திருப்பு
செடிகள் வளர்ப்பதற்கான பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.
தென்னைநார்க் கழிவுகள் நன்கு மக்குவதற்காக, பைகளை ஏழு முதல் எட்டு நாட்களுக்கு அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு தென்னைநார்க் கழிவு கருப்பு நிறமாக மாறிவிடும். அப்போதுதான் பைகள், விதைப்பதற்கு ஏற்றதாக மாறும்.
செடிகளை வளர்க்கும் காலம்:
காய்கறிச் செடிகளை எல்லாக் காலங்களிலும் பயிர் செய்யலாம். ஆனால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இந்த இரண்டு மாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
விதைப்பு முறை
நேரடி விதைப்புமுறை: வெண்டை, கொத்தவரை, செடி அவரை மற்றும் முள்ளங்கி விதைகளை நேரடியாக விதைக்க வேண்டும். விதையின் அளவைவிட இரண்டரை மடங்கு அதிக ஆழத்தில் விதைத்த பிறகு, மண்ணால் மூடிவிடவேண்டும்.
நேரடி விதைப்புமுறை: வெண்டை, கொத்தவரை, செடி அவரை மற்றும் முள்ளங்கி விதைகளை நேரடியாக விதைக்க வேண்டும். விதையின் அளவைவிட இரண்டரை மடங்கு அதிக ஆழத்தில் விதைத்த பிறகு, மண்ணால் மூடிவிடவேண்டும்.
கீரை வகைகளின் விதைகள் அளவில் மிகச் சிறியதாக இருப்பதால், ஒரு தேக்கரண்டி விதையுடன் இரண்டு பங்கு மணல் அல்லது நுண்ணுயிர் உரத்தைக் கலந்து தெளிக்க வேண்டும். பிறகு அதைச் செய்தித்தாளால் மூடிவிட வேண்டும். அதன் மேல் பூவாளியைக் கொண்டு நீர் ஊற்ற வேண்டும். விதைகள் நன்கு முளைத்த பிறகு தாளை எடுத்துவிட வேண்டும்.
நாற்றுவிட்டு நடவு செய்யும் முறை: நாற்றுவிட்டு நடவு செய்து பயிரிடும் காய்கறிகளான தக்காளி, கத்தரி, மிளகாய் ஆகியவற்றைக் குழித்தட்டில் ஒரு குழிக்கு ஒரு விதை வீதம் விதைக்க வேண்டும்
Comments
Post a Comment